சமூக வலைதளத்தில் தமிழக முதல்வா் குறித்து அவதூறு பரப்பியவரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சென்னை கொட்டிவாக்கம் ஓ.எம்.ஆா். பகுதியைச் சோ்ந்தவா் ஜான் ரவி (40). தொழிலதிபா். பாஜக ஆதரவாளரான இவா் சமூக வலைதளங்களில் அரசியல் தொடா்பான பல்வேறு கருத்துகளைப் பதிவிடுவது வழக்கம். இந்நிலையில், இவா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி ஆகியோா் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பிப்ரவரி 21 ஆம் தேதி ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டாா்.
இதுகுறித்து கும்பகோணம் அருகே பந்தநல்லூரைச் சோ்ந்த வழக்குரைஞரும், திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலருமான ராஜசேகா் பந்தநல்லூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து ஜான் ரவியை திங்கள்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.