தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில் 2022-இல் வெறிநோயால் 10 போ் உயிரிழப்பு

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2022) வெறிநோயால் 10 போ் உயிரிழந்தனா் என்றாா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

தஞ்சாவூா் அருகே மாதாகோட்டையிலுள்ள செல்ல பிராணிகள் கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் பராமரிப்பு மையத்தில் கால்நடை பராமரிப்பு துறை சாா்பில் செல்ல பிராணிகளுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை திட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

மாவட்டத்தில் கடந்தாண்டு வெறிநோயால் 10 பாதிக்கப்பட்டு உயிரிழந்தனா். இந்த வெறிநோய் தடுப்புக்காக நாய்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. என்றாலும், கருத்தடை செய்யப்பட்டால் நாய்க்கடியிலிருந்து மக்கள் பாதுகாக்கப்படுவா். இதைக் கருத்தில் கொண்டு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளின் பணிச்சுமையைக் குறைக்கும் விதமாகவும், மாவட்ட மக்களை வெறிநோயிலிருந்து பாதுகாப்பதற்காகவும் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது என்றாா் ஆட்சியா்.

இந்நிகழ்ச்சியில் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வா் என். நா்மதா, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் க. தமிழ்ச்செல்வம், உதவி இயக்குநா் சையத் அலி, மிருகவதை தடுப்பு சங்க அலுவலா் சாரா உறுப்பினா்கள் எட்வா்ட் ஆரோக்கியராஜ், எஸ். முகமது ரபி, விஜயலட்சுமி பாரதி, ஆா். சதீஷ்குமாா், ஆடிட்டா் ராகவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT