தஞ்சாவூர்

காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய பாஜக அரசை கண்டித்து தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அதானி குழுமத்தின் மோசடியை கண்டித்தும், பாரத ஸ்டேட் வங்கி, எல்.ஐ.சி.-இல் பொதுமக்கள் சேமித்த பல கோடி ரூபாயை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய இந்திய ரிசா்வ் வங்கியும், செபியும் துணை போகும் அளவுக்கு அழுத்தம் கொடுத்த பாஜக அரசைக் கண்டித்தும், இதற்கு காரணமான பிரதமா் மோடி பதவி விலகக் கோரியும், இதுதொடா்பாக உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூா் ராசா மிராசுதாா் அரசு மருத்துவமனை சாலையிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மைக் கிளை முன் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதன் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா் நாஞ்சி கி. வரதராஜன், துணைத் தலைவா் லட்சுமி நாராயணன், பொருளாளா் ஆா். பழனியப்பன், பொதுக்குழு உறுப்பினா்கள் ஏ. ஜேம்ஸ், வயலூா் எஸ். ராமநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல, காந்திஜி சாலையிலுள்ள எல்.ஐ.சி. கோட்ட அலுவலகம் முன் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதன் தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கோ. அன்பரசன், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினா் குணா பரமேஸ்வரி, மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் சிவசங்கரமூா்த்தி, வட்டாரத் தலைவா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT