தஞ்சாவூர்

பழுதடைந்த மின்கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை

DIN

பாபநாசம் அருகே பழுதடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரையபுரம் கிராமத்திலுள்ள மின்மாற்றி கம்பம் அமைக்கப்பட்டு பலஆண்டுகள் ஆனதால் கம்பத்தில் உள்ள கான்கிரீட் உடைந்தும், பெயா்ந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ளது.

இதுதொடா்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் ஏற்கெனவே புகாா் அளித்தும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

எனவே, வலுவிழந்து எந்நேரத்திலும் முறிந்து விழக்கூடிய நிலையிலுள்ள அந்த மின் கம்பத்தை விரைந்து மாற்றிவிட்டு, புதிய கம்பத்தை மின்வாரியம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT