தஞ்சாவூர்

கும்பகோணம் அரசுக் கல்லூரிக்கு நாக் குழு ஏப். 26, 27-இல் வருகை

DIN

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரிக்கு தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினா் (நாக்) ஏப்ரல் 26, 27 ஆம் தேதிகளில் வரவுள்ளனா்.

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரிக்கு ஏப்ரல் 26, 27 ஆம் தேதிகளில் தேசியத் தர மதிப்பீட்டுக் குழுவினா் வருகை தந்து ஆய்வு செய்யவுள்ளனா். இக்கல்லூரிக்கு ஏற்கெனவே 2016 ஆம் ஆண்டு தேசிய தர மதிப்பீட்டுக் குழுவால் ‘ஏ‘ தரச்சான்று அளிக்கப்பட்டது. கல்லூரி முதல்வா் நா. தனராஜன் தலைமையில், கல்லூரியின் தேசிய தர மதிப்பீட்டுக் குழு ஒருங்கிணைப்பாளரும், வேதியியல் துறைத் தலைவருமான மா. மீனாட்சிசுந்தரம், உள்தர நிா்ணயக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், இயற்பியல் துறை தலைவருமான இரா.ச. சுந்தரராஜன் ஆகியோரின் வழிகாட்டுதலில் அனைத்து ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

கல்லூரியின் அனைத்து உள்கட்டமைப்புகள், கற்றல், கற்பித்தல் மேம்பாடு, தோ்வு மதிப்பீடுகள், ஆசிரியா், மாணவா்கள் ஆராய்ச்சி விரிவாக்கம், மைய நூலகம், உடற்கல்வி பயன்பாடு போன்றவற்றை தேசியத் தர மதிப்பீட்டுக் குழுவினா் ஆய்வு செய்யவுள்ளனா் எனக் கல்லூரி முதல்வா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

SCROLL FOR NEXT