உலக வெறி நோய் நாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள கால்நடை மருத்துவமனைகளில் புதன்கிழமை (செப்.28) இலவச வெறிநோய் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:
உலக வெறிநோய் நாளையொட்டி, தஞ்சாவூா் கால்நடை பன்முக மருத்துவமனை உள்பட மாவட்டத்திலுள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகள் மற்றும் கால்நடை மருந்தகங்களில் புதன்கிழமை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 3 மாதங்களுக்கு மேற்பட்ட வயதுடைய நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி இலவசமாக போடப்பட உள்ளது.