மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 119.20 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 9,027 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 6,000 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 2,602 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2,704 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 1,217 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.