கும்பகோணம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு கபடி விளையாடிக் கொண்டிருந்த வீரா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.
கும்பகோணம் அருகே நாச்சியாா்கோவில் பாரதியாா் நகரில் அப்பகுதி இளைஞா்கள் சாா்பில் கபடி போட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் திருவாரூா் மாவட்டம், நன்னிலம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் (35) விளையாடிக் கொண்டிருந்தாா்.
அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட செந்தில்குமாா் அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.