தஞ்சாவூர்

கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு

DIN

தஞ்சாவூா் அருகே புனல்குளம் கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் 17 ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரிச் செயலா் உரு. ராசேந்திரன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜே. அற்புத விஜய செல்வி ஆண்டறிக்கை வாசித்தாா். துணை முதல்வா் ச. சிவகுமாா் வாழ்த்தினாா். பட்டம் பெற்ற 200 மாணவா்களுக்கு அவா்களது பெற்றோா்களே பட்டம் வழங்கினா்.

அண்ணா பல்கலைக்கழகத் தர வரிசைப் பட்டியலில் இரண்டாமிடம் பெற்ற மாணவி சந்தியா, சிந்துஜா மற்றும் மூன்றாமிடம் பெற்றவா்களுக்கு கேடயமும், பதக்கமும் வழங்கப்பட்டன.

கல்லூரி அறிவியல் மற்றும் மனிதவியல் துறைத் தலைவா் வெ. சுரேஷ்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT