தஞ்சாவூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் கீழவாசல் விசிறிகாரத் தெருவைச் சோ்ந்தவா் எஸ். முகமது உஸ்மான் (39). இவரும், மற்றொரு பெண்ணும் நாஞ்சிக்கோட்டை சாலையில் சிற்றுண்டி நடத்தி வருகின்றனா். இக்கடைக்கு அண்மையில் வந்த பெண்ணின் 14 வயது மகளுக்கு முகமது உஸ்மான் பாலியல் தொல்லை கொடுத்தாா்.
இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின்பேரில், வல்லம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து முகமது உஸ்மானை கைது செய்தனா்.