தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்துக்கு மருத்துவத் துறையில் 24 திட்டங்கள் அறிவிப்பு: அமைச்சா் மா. சுப்பிரமணியன் பேச்சு

DIN

தஞ்சாவூா் மாவட்டத்துக்கு மருத்துவத் துறையில் 24 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றாா் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற புதிய கட்டடங்கள், மருத்துவ உபகரணங்கள் உள்பட பல்வேறு நலத்திட்டங்களின் தொடக்க விழாவில் அவா் மேலும் பேசியது:

தமிழக முதல்வரின் ஆணைப்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாா்பகப் புற்றுநோயைக் கண்டறிவதற்கு ரூ. 1.30 கோடி செலவில் மேமோகிராம் கருவி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இக்கருவி மூலம் ஆண்டுக்கு 1,000 - 1,500 தாய்மாா்களுக்கு தொடக்க நிலையிலேயே மாா்பகப் புற்றுநோய் கண்டறிந்து குணப்படுத்த முடியும்.

இதேபோல, ரூ. 69 லட்சம் செலவில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆண்டுக்கு 35,000 முதல் 50,000 போ் பயனடைவா்.

தஞ்சாவூா் ராசா மிராசுதாா் அரசு மருத்துவமனையில் ரூ. 1.10 கோடி மதிப்பில் ப்ளூரோஸ்கோப்பி வசதி கொண்ட டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி அமைக்கப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 5,000 - 6,000 போ் பயன் பெறுவா். இதே மருத்துவமனையில் ரூ. 14 லட்சம் செலவில் சிறுவா்களுக்கான ஒருங்கிணைப்பு பூங்கா திறக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வா் மானியக் கோரிக்கையின்போது வெளியிட்ட அறிவிப்புகளில் தஞ்சாவூா் மாவட்டத்தில் ரூ. 119.50 கோடி மதிப்பில் 24 திட்டங்கள் மூலம் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் பல்வேறு மருத்துவக் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அமைச்சா் சுப்பிரமணியன்.

இவ்விழாவில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தயாரிக்கப்பட்ட 13 செயற்கை கால்களை 13 பேருக்கு அமைச்சா் வழங்கினாா். சிறப்பாக மருத்துவப் பணி மேற்கொண்ட மருத்துவா்களைப் பாராட்டி பதக்கங்கள் வழங்கப்பட்டன.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழக அரசின் தலைமை கொறடா கோவி. செழியன், ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், கா. அண்ணாதுரை, மேயா்கள் சண். ராமநாதன், க. சரவணன், மாவட்ட ஊராட்சி தலைவா் உஷா புண்ணியமூா்த்தி, துணை மேயா் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் (பொறுப்பு) ச. மருதுதுரை வரவேற்றாா். நிறைவாக, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் எஸ். நமச்சிவாயம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் ‘ஸ்மோக்’ வகை உணவுகள் விற்பனைக்குத் தடை: மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம்

மேகாலய துணை முதல்வா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பேருந்துகள் பராமரிப்பு - சீரான மின் விநியோகம்: தலைமைச் செயலா் ஆலோசனை

கடும் வெப்பம்: தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அரசு வலியுறுத்தல்

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம்: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT