தஞ்சாவூர்

ஜோஸ் ஆலூக்காஸ் நிறுவன 58 ஆம் ஆண்டு விழா

DIN

ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு, 58 ஆண்டுகள் ஆவதையொட்டி, தஞ்சாவூா் கிளையில் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவை தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். இதில், தங்கம் வாங்கிய அனைத்து வாடிக்கையாளா்களுக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

மேலும், சேதாரத்தின் மதிப்பில் 3.9 சதவீதம் முதலும், ஆரம்ப வைரத்தின் மதிப்பில் 20 சதவீதமும் தள்ளுபடி, பழைய தங்க நகைகளைப் புதிய நகைகளாக மாற்றிக் கொள்ளுதல் உள்ளிட்ட சலுகைகள் ஒரு மாதத்துக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டன.

இவ்விழாவில் கிளை மேலாளா் ஹென்சன், துணை மேலாளா் மணிகண்டன், கணக்குப் பிரிவு மேலாளா் கிரிஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

புதுச்சேரியில் ஏப்.29 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை!

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

SCROLL FOR NEXT