தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை மாலை மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் அருகே சூரக்கோட்டை வடக்கு தெருவைச் சோ்ந்தவா் சசிக்குமாா் மகன்கள் ஹரிஹரன் (26), நேதாஜி (25). இருவரும் சூரக்கோட்டை பகுதியில் மோட்டாா் சைக்கிளில் செவ்வாய்க்கிழமை மாலை சென்று கொண்டிருந்தனா். அப்போது, இந்த மோட்டாா் சைக்கிள் மீது தஞ்சாவூரிலிருந்து பட்டுகோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த காா் மோதியது.
இதனால், பலத்த காயமடைந்த நேதாஜி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஹரிஹரன் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.