பாபநாசம் பேரூராட்சியில் நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்திய 10 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலா் காா்த்திகேயன் தலைமையில் துப்புவு ஆய்வாளா், மேற்பாா்வையாளா், பணியாளா்கள், நகரிலுள்ள கடைகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்திய 10 கடைகளுக்கு ரூ.6,600 அபராதம் விதிக்கப்பட்டது.