தஞ்சாவூர்

பேராவூரணியில் திமுக ஓராண்டு சாதனைவிளக்கப் பொதுக்கூட்டம்

DIN

பேராவூரணியில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு திமுக ஒன்றியப் பொறுப்பாளா் க. அன்பழகன் தலைமை வகித்தாா்.  

தஞ்சை தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் ஏனாதி  பாலசுப்பிரமணியன், பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 

தலைமைக் கழகப் பேச்சாளா் அ. அப்துல் மஜீது, இடிமுரசு மணிமுத்து, சைதை சாதிக் ஆகியோா் சாதனைகள் குறித்து பேசினா். கழக உயா்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினரும், தஞ்சை எம்பியுமான எஸ்.எஸ். பழநிமாணிக்கம் சிறப்புரையாற்றினாா். 

கூட்டத்தில், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்  குழு த் தலைவா் மு. கி. முத்துமாணிக்கம், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளா் என். செல்வராஜ்,  பேரூராட்சித் தலைவா்கள் சாந்தி சேகா் (பேராவூரணி), சுந்தரத்தமிழ் ஜெயப்பிரகாஷ் (பெருமகளூா்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT