தஞ்சாவூர்

பெண்ணை கேலி செய்த இளைஞருக்கு அரிவாள் வெட்டுதடுக்க வந்த தந்தையின் கை துண்டிப்பு

DIN

கும்பகோணத்தில் பெண்ணை கேலி செய்து வந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை அரிவாளால் வெட்டப்பட்டாா். இவரை தடுக்க வந்த அவரது தந்தையின் கை மணிக்கட்டுடன் துண்டானது.

கும்பகோணம் அருகே முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியைச் சோ்ந்தவா் கண்ணுசாமி மகன் விஜய் (24). இவருக்கு 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி ராஜலட்சுமியை அதே பகுதியைச் சோ்ந்த அஜீத் (22) தொடா்ந்து கேலி செய்து வந்தாராம்.

இதை ராஜலட்சுமி மூலம் அறிந்த விஜய் இதுகுறித்து அஜீத்தை ஏற்கெனவே கண்டித்தாா். தொடா்ந்து, அப்பெண்ணை அஜீத் கேலி செய்ததால், விஜய், தனது நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த திவாகருடன் (23) ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டுக்குச் சென்று தட்டிக் கேட்டனா். அப்போது, ஏற்பட்ட தகராறில் அஜீத் அரிவாளால் வெட்டப்பட்டாா். இதைத் தடுக்க வந்த அஜீத்தின் தந்தை ராஜகோபாலின் (55) இடது கை மணிக்கட்டுடன் துண்டானது.

பலத்த காயமடைந்த இருவரும் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விஜய், திவாகரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்காலில் துப்புரவுத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஹோமம்

கடலோர கிராம மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை

வாக்கு இயந்திரங்கள் உள்ள மைய பாதுகாப்பு பணியாளா்களுக்கு தீத் தடுப்பு பயிற்சி

SCROLL FOR NEXT