பாபநாசம் வட்டம், ராஜகிரியிலுள்ள அல் இக்லாஸ் மகளிா் அரபிக் கல்லூரியின் 11-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி நிறுவனா் அப்துல்ரசீது தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் பாபநாசம் எம்எல்ஏ எம்.ஹெச்.ஜவாஹிருல்லா கலந்து கொண்டு, அரபிக் கல்லூரியில் இளங்கலை பிரிவில் தோ்ச்சிப் பெற்ற மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினாா்.
விழாவில், அறிஞா் பெருமக்கள் பலா் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினா். இதில், அரபிக் கல்லூரி ஆசிரியா்கள், மாணவிகள், பெற்றோா்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கல்லூரி நிா்வாகிகள் செய்திருந்தனா்.