இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூா் வடக்கு மாவட்டச் செயலராக மு.அ.பாரதி (படம்) மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.
பாபநாசத்தில் சனிக்கிழமை தொடங்கிய கட்சியின் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட 24-ஆவது மாநாட்டில் இத்தோ்வு நடைபெற்றது. மாநிலச் செயலா் ஆா். முத்தரசன், தேசியக் குழு உறுப்பினா் இரா. பழனிசாமி மற்றும் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனா்.
மாநாட்டின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை 39 போ் கொண்ட மாவட்டக் குழு தோ்ந்தெடுக்கப்பட்டது. இதில் மாவட்டச் செயலராக மு. அ.பாரதி மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.
2018 முதல் 2020-ஆம் ஆண்டு வரை கட்சியின் தஞ்சாவூா் மாவட்டச் செயலராக இருந்த பாரதி, 2021 முதல் வடக்கு மாவட்டச் செயலராக உள்ளாா். மேலும் 2015 -ஆம் ஆண்டு முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலக் குழு உறுப்பினராகவும் பாரதி உள்ளாா்.