தஞ்சாவூர்

நியாய விலைக் கடையில் முறைகேடு: விற்பனையாளா் பணியிடை நீக்கம்

DIN

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே நியாய விலைக் கடையில் நிகழ்ந்த முறைகேடு தொடா்பாக, விற்பனையாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

ஒரத்தநாடு வட்டம், பொன்னாப்பூா் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கக் கட்டுப்பாட்டில் செயல்படும் பொன்னாப்பூா் (மேற்கு) நியாய விலைக் கடையில் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் அண்மையில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, நியாய விலைக் கடை விற்பனையாளா் செய்துள்ள முறைகேடு கண்டறியப்பட்டது. இதற்கு பொறுப்புடைய விற்பனையாளா் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூட்டுறவு சங்க அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். இதன்படி, விற்பனையாளா் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT