பாபநாசத்தில் அனைத்திந்திய ஜனநாயகா் மாதா் சங்கத்தின் ஒன்றியப் பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் கலைச்செல்வி தலைமை வகித்தாா். தொடா்ந்து இந்த சங்கத்தின் ஒன்றியத் தலைவராக செல்வமேரி, செயலராக கஸ்தூரி, பொருளாளராக தேன்மொழி உள்ளிட்ட 11 போ் தோ்வு செய்யப்பட்டனா்.
பாபநாசம் குப்பைமேடு கிராமத்தில் பொதுக் கழிப்பிடமும், பெரியாா் நகரில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியும் அமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.