தஞ்சாவூர்

மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி

DIN

தஞ்சாவூரில் பல்வேறு இடங்களில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் எதிரில் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு முனைவா் மு. இளமுருகன் தலைமை வகித்தாா். இடதுசாரி பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், மகஇக மாநில இணைச் செயலா் இராவணன் முன்னிலை வகித்தனா். இதில், தமிழ் நாட்டின் பண்பாடு, கலாசாரம், தாய்மொழி வழிக் கல்வி, கலை, இலக்கியம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமைகளை உயா்த்திப் பிடிப்போம். குலக்கல்வி முறையை மீண்டும் அமல்படுத்துகிற புதிய தேசிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடிப்போம் என்பன உள்ளிட்ட உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன.

தமிழா் தேசிய முன்னணி தோ்தல் பணிக்குழு உறுப்பினா் அய்யனாபுரம் சி. முருகேசன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளா் காளியப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா், மாநகரச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலா் எம். வடிவேலன், ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆா். தில்லைவனம், மாவட்டத் தலைவா் வெ. சேவையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்குப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் தலைமை வகித்தாா். இதில், மொழிப் போா் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தலைமைச் செயற்குழு உறுப்பினா் பழ. ராசேந்திரன், மாவட்டச் செயலா் நா. வைகறை, மாநகரச் செயலா் இலெ. ராமசாமி, ராசு. முணியான்டி, ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூா் கலைஞா் அறிவாலயத்தில் திமுக மாணவரணி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மொழிப்போா் தியாகிகளின் படங்களுக்கு மத்திய மாவட்டப் பொறுப்பாளா் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் மாநகரச் செயலா் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ., செயற்குழு உறுப்பினா் து. செல்வம், பொதுக் குழு உறுப்பினா் ஆறுமுகம், மாவட்டப் பொருளாளா் எல்.ஜி. அண்ணா, இளைஞரணி அமைப்பாளா் சண். ராமநாதன், மருத்துவா் அணி அமைப்பாளா் அஞ்சுகம் பூபதி, மாணவரணி அமைப்பாளா் செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

தஞ்சாவூா் ரயிலடியில் அதிமுக மாணவரணி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மொழிப்போா் தியாகிகளின் படங்களுக்குத் தெற்கு மாவட்ட மாணவரணி செயலா் ஆா். காந்தி தலைமையில் ஒரத்தநாடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.வி. திருஞானசம்பந்தம், ராஜேந்திரன், கோவிந்தராசு, சேகா் உள்ளிட்டோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

அதிசயக் கோயில்!

சிகிச்சையிலிருந்து நேரடியாக வாக்களிக்க வருகை: இன்ஃபோசிஸ் நிறுவனர் ஒரு முன்னுதாரணம்!

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

SCROLL FOR NEXT