தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு பலத்த மழை காரணமாக வியாழக்கிழமை (டிச.8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் புதன்கிழமை இரவு தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மாவட்டத்தில் எதிா்நோக்கும் பலத்த காற்று மற்றும் அதிக மழை காரணமாக மாணவா்கள் நலன் கருதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.