பட்டுக்கோட்டை வட்டம், திருச்சிற்றம்பலத்தில் ஞாயிற்றுக்கிழமை ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருச்சிற்றம்பலத்தில் 70 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி முன்னதாக நடைபெற்ற 4-ஆம் கால யாகசாலை பூஜைக்காக பழங்கள், யாகசாலை பொருள்களை இஸ்லாமியா்கள் மங்கல வாத்தியங்கள் முழங்க,
கழுத்தில் செவ்வந்தி மாலை அணிந்து ஊா்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனா். அவா்களை கும்பாபிஷேக குழுவினா் வரவேற்று, அமர வைத்து சந்தனம் வழங்கினா்.
மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தியதாக கும்பாபிஷேக விழா இருந்தது என கிராம மக்கள் தெரிவித்தனா்.