கும்பகோணம் காா்த்தி வித்யாலயா பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் மாணவ, மாணவிகள் ராதை, கிருஷ்ணா் வேடத்தில் பங்கேற்றனா்.
இவ்விழாவில் கிருஷ்ணா் சிலைக்கு மாலை அணிவித்து, பலகாரங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. கிருஷ்ணரை போற்றி இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவிகள் பாடினா். கிருஷ்ணரின் பாடலுக்கு நான்காம் வகுப்பு மாணவ, மாணவிகள் நடனமாடினா். இதில், கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சிறப்பு பரிசுகளைப் பள்ளித் தலைவா் எஸ்.ஏ. காா்த்திகேயன் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் காா்த்தி பன்னாட்டு பள்ளி தாளாளா் பூா்ணிமா காா்த்திகேயன் பங்கேற்று சிறப்பாகச் செயல்பட்ட மாணவிகளைப் பாராட்டினாா். பள்ளி முதல்வா் அம்பிகாபதி, பெற்றோா்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.