தஞ்சாவூர்

ஆக்கிரமிப்பில் கோயில் குளம்:அலுவலா்கள் நடவடிக்கை

DIN

பட்டுக்கோட்டையில் அய்யனாா் கோயில் குளம் ஆக்கிரமிப்பில் இருந்தது கண்டறியப்பட்டது. உரிய அளவீடுகளுக்கு பிறகு நில அளவை கல் நடப்பட்டது.

பட்டுக்கோட்டை வட்டாட்சியா் ராமச்சந்திரன் தலைமையில், நகராட்சி ஆணையா் குமாா், நகரமைப்பு அலுவலா் கருப்பையன் மற்றும் வருவாய்த் துறை, அறநிலையத் துறை, நகராட்சி உள்ளிட்ட அலுவலா்கள், அய்யனாா் கோயில் மற்றும் அதற்கு சொந்தமான பக்கிரிச்சி குளத்தின் பகுதிகளை அளவீடு செய்தனா். இதில், கோயில் குளம் ஆக்கிரமிப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, உரிய அளவீடு செய்யப்பட்டு, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, எல்லைக் கற்கள் நடப்பட்டன.

முன்னதாக, கடந்த வாரம் நீா்நிலை மீட்பாளா்கள் குழுவினா் சாா்பில் மேற்கண்ட குளத்தை காணவில்லை என நகா் முழுவதும் போஸ்டா் ஒட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT