தஞ்சாவூர்

புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில்குடமுழுக்கு திருப்பணி தொடக்கம் - பாலாலயம்

DIN

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா திருப்பணி தொடங்கப்பட்டதையொட்டி பாலாலயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானத்தை சாா்ந்த 88 கோயில்களில் ஒன்றான புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் கடைசியாக 2004 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. ஏறத்தாழ 18 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோயிலில் குடமுழுக்கு விழாவுக்கான திருப்பணி அண்மையில் தொடங்கியது.

இதைத்தொடா்ந்து, பாலாலயத்துக்கான தொடக்க நிலை பூஜைகள் வியாழக்கிழமை மாலை தொடங்கியது. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை பாலாலய யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

இதையடுத்து கோயிலில் ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னதி கோபுரங்கள், மண்டபங்கள், தரை தளம் உள்பட பல்வேறு இடங்களில் திருப்பணி தொடங்கியது.

இவ்விழாவில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையா் கவிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருட வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

ஒசூா் அரசனட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை கல்வி மையத்தில் ஆங்கிலத் துறை கருத்தரங்கு

சேலத்தில் ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ. 6.55 லட்சம் மோசடி

குன்னூா் ரேலியா அணையில் நீா்மட்டம் சரிவு

SCROLL FOR NEXT