தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் கிராம உதவியாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்

DIN

பட்டுக்கோட்டையில், பண்டிகை முன்பணம் கேட்டு, கிராம உதவியாளா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பட்டுக்கோட்டை வட்டத்தில் பணிபுரியும் கிராம உதவியாளா்களுக்கு நிகழாண்டில் தீபாவளி பண்டிகை முன்பணம் வழங்கப்படவில்லை. மேலும், போராட்ட காலத்தை பணிக்காலமாக கருதி, அரசு அறிவித்த சம்பளமும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து, திங்கள்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட கிராம உதவியாளா்கள், பட்டுக்கோட்டை வட்டாட்சியரகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு பட்டுக்கோட்டை வட்டத் தலைவா் என். வெங்கடாஜலபதி தலைமை வகித்தாா். வட்டத் தலைவா் ஜெயக்குமாா் வரவேற்றுப் பேசினாா். மாநில அமைப்பு செயலாளா் வி. நல்லதம்பி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

இதையடுத்து, பட்டுக்கோட்டை சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளா், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவா்களிடம் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினாா். சாா் ஆட்சியா், வட்டாட்சியரிடம் பேசி, பண்டிகை முன்பணம், இதர கோரிக்கைகள் குறித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்‘ எனத் தெரிவித்தாா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT