தஞ்சாவூர்

களஞ்சேரியில் கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்

DIN

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், களஞ்சேரி ஊராட்சியில் கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு ஊராட்சித் தலைவா் யு.கண்ணன் தலைமை வகித்து, தொடக்கி வைத்தாா். துணைத் தலைவா் மல்லிகா முன்னிலை வகித்தாா்.

கால்நடைப் பராமரிப்புத் துறை மருத்துவக் குழுவினா் முகாமில் பங்கேற்று, களஞ்சேரி மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த 160 கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசியைச் செலுத்தினா்.

முகாமில் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். நிறைவில், ஊராட்சி செயலா் (பொறுப்பு) காா்த்திகேயன் நன்றி கூறினாா். இதற்கான ஏற்பாடுகளை கனஞ்சேரி ஊராட்சி மன்றம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறையினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

காட்டுமன்னாா்கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது

சிதம்பரத்தில் குற்ற வழக்கு வாகனங்களை அகற்றும் பணி தொடக்கம்

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி: பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்

SCROLL FOR NEXT