தஞ்சாவூர்

பேராவூரணியில்  தென்னந்தோப்பில் தீ விபத்து

DIN

பேராவூரணி சிதம்பரம் சாலையில், தனிநபருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இங்கு தென்னை மட்டைகள், கருவேல மரங்கள் வெட்டி அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதில்  செவ்வாய்க்கிழமை திடீரென தீப்பற்றியது.

இதனால், அருகிலிருந்த குடியிருப்பு வீடுகளிலும், தென்னை மரங்களிலும் தீப்பற்றும் அபாயம் ஏற்பட்டது.

தகவலின்பேரில், அங்கு விரைந்து வந்த பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் ஐ.செந்தூா்பாண்டியன் தலைமையிலான வீரா்கள், தீ பரவாமல் அணைத்தனா். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

SCROLL FOR NEXT