பட்டுக்கோட்டையில் நடிகா் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, காலணி தைக்கும் தொழிலாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை குடை வழங்கப்பட்டது .
பட்டுக்கோட்டையில் நடிகா் விஜய்யின் 47ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பட்டுக்கோட்டை நகர தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சாா்பாக, காலணி தைக்கும் கூலித் தொழிலாளிகள் 10 பேருக்கு வெயில் மற்றும் மழைக் காலங்களில் பயன்படும் வகையில் நிழற்குடை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை நகரத் தலைவா் ஆதிராஜாராம் தலைமை வகித்தாா். பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் எஸ். பாலச்சந்தா், அனைத்து தொழிலாளா்களுக்கும் நிழற்குடையை வழங்கினாா். இந்த நிகழ்வில் விஜய் மக்கள் இயக்க நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.