தஞ்சாவூர்

புழுங்கல் அரிசி அரைவை முகவராக விண்ணப்பிக்கலாம்

DIN

புழுங்கல் அரிசி அரைவை முகவராக நியமனம் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கழகத்தின் தஞ்சாவூா் முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல், கழக நவீன அரிசி ஆலைகள் மற்றும் கழகத்தில் அரைவை முகவராக உள்ள தனியாா் அரைவை ஆலைகள் மூலம் அரைவை செய்து பொது விநியோகத் திட்டத்துக்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூா் மண்டலத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லை அரைவை செய்து பொது விநியோகத் திட்டத்துக்கு அரிசி வழங்குவதற்கு ஏதுவாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கொண்ட தனியாா் அரைவை ஆலை உரிமையாளா்களிடமிருந்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் புழுங்கல் அரிசி அரைவை முகவராக நியமனம் செய்வது தொடா்பான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT