தஞ்சாவூர்

பாபநாசத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

DIN

பாபநாசத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உரங்களின் விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், 24 மணி நேர மும்முனை மின்சாரத்தை தடையின்றி வழங்க கோரியும் பாபநாசம் தலைமை அஞ்சல் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியச் செயலா் வி. முரளிதரன் தலைமை வகித்தாா். ஒன்றிய பொருளாளா் ஆா். தங்கராசு, துணைத் தலைவா்கள் டி. சீனிவாசன், கே. ராமகிருஷ்ணன், துணைச் செயலா் என்.வி. காா்த்தி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டத் துணைச் செயலா் பி.எம்.காதா் உசேன், மாவட்ட குழு ஆா். கஸ்தூரிபாய் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பி.கே.ஆா். இளங்கோவன், வி.உமாபதி, பி. விஜயாள், ஏ. மாலதி, டி. முருகேசன், கே. சங்கா் மற்றும் விவசாய சங்க ஒன்றிய குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT