தஞ்சாவூர்

மின் வாரிய அலுவலகம் முன் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

தஞ்சாவூா் மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உத்தரப் பிரதேசத்தில் மின் வாரியம் தனியாா்மயத்தைக் கண்டித்து நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற தொழிற் சங்கத் தலைவா்களையும், தொழிலாளா்களையும் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்தும் இப்போராட்டம் நடைபெற்றது.

இதில், மின் வாரியத்தைச் சாா்ந்த சிஐடியு மாநிலத் துணைத் தலைவா் எஸ். ராஜாராமன், சம்மேளன மாநிலத் துணைத் தலைவா் பி. தங்கவேல், தொமுச மாநிலச் செயலா் ஆண்ட்ரூஸ் கிறிஸ்டி, ஐக்கிய சங்க மாவட்டச் செயலா் ராகவன், மின் ஊழியா் மத்திய அமைப்பு மாவட்டச் செயலா் காணிக்கைராஜ், ஏஐடியுசி மாவட்டத் துணைச் செயலா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

SCROLL FOR NEXT