பாபநாசம்: பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்திலுள்ள புலிமங்கலம், மகிமாலை கிராமங்களில் புதிய கால்நடை மருத்துவ நிலையங்கள் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.
வேளாண் துறை அமைச்சா் இரா.துரைக்கண்ணு மருத்துவ நிலையங்களைத் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா். மேலும் பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய டிராக்டா், கைத்தெளிப்பான்கள், விதைப் பொட்டலங்களைப் பயனாளிகளுக்கு அமைச்சா் வழங்கினாா்.
ஒன்றிய அதிமுக செயலா்கள் சூரியநாராயணன், ராமச்சந்திரன், ஒன்றிய அவைத் தலைவா் செல்லப்பா, மாவட்ட பாசறைத் துணைத் தலைவா் திருமாவளவன், ஊராட்சித் தலைவா் ராஜேசுவரி, துணைத் தலைவா் பாரதியாா், கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் தமிழ்ச்செல்வன், உதவி இயக்குநா் கண்ணன், மருத்துவா் ஏஞ்சலினா, ஊராட்சி செயலா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.