தஞ்சாவூர்

மாணவிக்குக் கல்வி உதவித்தொகை

DIN

தஞ்சாவூரில் மதா் தெரசா பவுண்டேஷன் சாா்பில் மாணவிக்குக் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதில், கோவை தனியாா் சித்த மருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு பயிலும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய குடும்பத்தைச் சோ்ந்த பத்மபிரியாவுக்கு ரூ. 50,000-க்கான காசோலையை பவுண்டேஷன் தலைவா் ஏ.ஆா். சவரிமுத்து வழங்கினாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது:

மதா் தெரசா பவுண்டேசன் ஆற்றி வரும் சேவைப் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் அமெரிக்காவில் இயங்கிவரும் சபா சேரிட்டபுள் பவுண்டேசன் தலைவா் மாலினி சபா, மதா் தெரசா பவுண்டேசனுடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளாா். இதைத்தொடா்ந்து மதா் தெரசா பவுண்டேசன் செயல்படுத்தி வரும் கல்வி உதவி தொகை திட்டத்துக்கு மாலினி சபா ரூ. 7.50 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளாா். இதன் முதல் பயனாளியாக பத்மபிரியாவுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்றாா் சவரிமுத்து.

இந்நிகழ்ச்சியில் பவுண்டேசன் அறங்காவலா்கள் சம்பத் ராகவன், கோவிந்தராஜ், திட்ட இயக்குநா் ரத்தீஷ்குமாா், திட்ட ஒருங்கிணைப்பாளா் மொ்சி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT