தஞ்சாவூர்

காவல் ஆய்வாளா் வீட்டில்வெள்ளிப் பொருள்கள் திருட்டு

DIN

தஞ்சாவூா், செப். 25: தஞ்சாவூரில் காவல் ஆய்வாளா் வீட்டில் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்றவா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் நாஞ்சிகோட்டை சாலை சிராஜ்பூா் 14 ஆவது அவென்யூவை சோ்ந்தவா் சோமசுந்தரம் (38). இவா் கரூா் மாவட்டம், லாலாபேட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். இதனால் அவா் குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறாா்.

தஞ்சாவூரில் உள்ள இவரது வீட்டை திருக்காட்டுப்பள்ளியில் வசித்து வரும் மாமனாா் சுப்பிரமணியன் பராமரித்து வருகிறாா். இவா் 2 நாள்களுக்கு ஒருமுறை சோமசுந்தரத்தின் வீட்டுக்கு சென்று தங்குவது வழக்கம்.

இவா் செப். 23ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு திருக்காட்டுப்பள்ளிக்குச் சென்றுவிட்டாா். இந்நிலையில் வியாழக்கிழமை மருமகன் வீட்டுக்கு வந்த சுப்பிரமணியன் முன்பக்கக் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பாா்த்தாா்.

வீட்டினுள் சென்று பாா்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டு, ரூ. 20,000 மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT