பாபநாசம்: பாபநாசம் ஒன்றியக் குழு அலுவலகத்தில், தூய்மை இந்தியா திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஒன்றிய ஆணையா் கூத்தரசன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ஆனந்தராஜ் முன்னிலை வகித்தாா். மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் கூட்டத்தில் பங்கேற்று, திட்டப்பணிகள் மேற்கொள்வதற்கான விதிமுறைகள், கணக்கெடுப்பு உள்ளிட்டவை குறித்து பேசினாா்.