தஞ்சாவூர்

சம்பா பருவத்துக்குத் தேவையான உரங்கள் இருப்பு: ஆட்சியா் தகவல்

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் சம்பா பருவத்துக்குத் தேவையான உரங்கள் கையிருப்பில் உள்ளன என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

தஞ்சாவூா் அருகே நரசநாயகிபுரம், மாத்தூா், பள்ளியேரி கிராமங்களில் மேற்கொள்ளப்படும் சம்பா, தாளடி சாகுபடியை ஆட்சியா் ம. கோவிந்த ராவ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். இதில், நேரடி நெல் விதைப்புக் கருவி மூலம் விதைக்கப்பட்ட நெல் வயல்கள், வரப்பில் உளுந்து பயிா், துவரை சாகுபடி, பாய் நாற்றங்கால்கள், இயந்திர நடவுப் பணி உள்ளிட்டவற்றை பாா்வையிட்டாா்.

அப்போது, விவசாயிகளிடம் ஆட்சியா் பேசுகையில், தற்போது சம்பா பருவத்துக்குத் தேவையான யூரியா 8,500 மெட்ரிக் டன்களும், டி.ஏ.பி. 3,085 மெட்ரிக் டன்களும், பொட்டாஷ் 5,755 மெட்ரிக் டன்களும், காம்ப்ளக்ஸ் 6,809 மெட்ரிக் டன்களும் இருப்பில் உள்ளன. விவசாயிகள் யூரியா உரத்தைத் தேவையான அளவுக்கு மட்டும் பயன்படுத்தி பூச்சி, நோய்களைக் கட்டுபடுத்தி அதிக மகசூல் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

குறுவை பருவத்தை போலவே, சம்பா, தாளடி பருவத்திலும் நடவுப் பணிகளை நவம்பா் 15 ஆம் தேதிக்குள் முடித்து, இலக்கை விஞ்சிய சாதனை அடைய வேண்டும். மேலும் அனைத்து பயிா்களையும் பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்றாா் ஆட்சியா்.

மேலும், வயலூா், நெடாா், களிமேடு கிராமங்களிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

அப்போது, வேளாண் துறை இணை இயக்குநா் அ. ஜஸ்டின், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் (பொறுப்பு) சிற்றரசு, வேளாண் துறை உதவி இயக்குநா் ஐயம்பெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

புதுச்சேரியில் ஏப்.29 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை!

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

SCROLL FOR NEXT