மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய குடியரசுத் தலைவருக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் அளிக்கப்படவுள்ள மனுவில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவா் ஆா்.கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வட்டார, நகர நிா்வாகிகள் மற்றும் மூத்த உறுப்பினா்கள் பங்கேற்றனா்.