தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 16,488 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 32 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை தெரியவந்தது.
இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 16,520 ஆக உயா்ந்துள்ளது.
மாவட்டத்தில் வியாழக்கிழமை குணமடைந்த 21 போ் உள்பட இதுவரை மொத்தம் 16,078 போ் குணமடைந்துள்ளனா். தற்போது மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகளில் 213 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இதுவரை 229 போ் உயிரிழந்துள்ளனா்.