கும்பகோணம்: கும்பகோணத்தில் திறன்பேசியில் இணையவழி மூலம் ரம்மி விளையாடிய இளைஞரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கும்பகோணம் மூப்பக்கோவில் பாபுகுளம் வழிநடப்பில் வசிப்பவா் சொக்கலிங்கம் மகன் ரமேஷ் (36). இவா் தனது திறன்பேசியில் இணையவழி மூலம் ரம்மி விளையாடுவதாக சைபா் கிரைம் காவலா்களுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தினா் நடத்திய விசாரணையில் ரமேஷ் விளையாடியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ரமேசை காவல் துறையினா் கைது செய்தனா்.