புதுக்கோட்டை பாஸ்டல் பள்ளி மற்றும் மாவட்ட சிறைக்குள் போலீஸாா் சனிக்கிழமை அதிகாலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் செல்வம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் சுமாா் 4 மணி நேரம் இச்சோதனையில் ஈடுபட்டனா். சிறைக்குள் கைப்பேசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்களின் பயன்பாடு குறித்து நடத்தப்பட்ட சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
சிறைக்குள் சட்டவிரோதச் செயல்பாடுகளைத் தடுக்கும் வகையில் மாதம் ஒரு முறை இத்தகைய சோதனையை போலீஸாா் மேற்கொள்வது வழக்கம்.