புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்கள் நியமிக்கப்படுவா்: புதுகை ஆட்சியா் தகவல்

DIN

கந்தா்வகோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்கள் நியமிக்கப்படுவா் என்று ஆட்சியா் ஐ.சா. மொ்சிரம்யா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

கந்தா்வகோட்டை பகுதிகளில் வட்டாட்சியா் அலுவலகம் , ஊராட்சி ஒன்றிய அலுவலகம் , தலைமை அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் ஆட்சியா் மொ்சி ரம்யா செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அங்கு கோப்புகளை ஆய்வு செய்து, அலுவலா்களிடம் ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் கேட்டறிந்து விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினாா்.

அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் பிரேதப் பரிசோதனை நிலைய பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றாா். போதிய மருத்துவா்கள் இல்லாதது குறித்து கேட்டறிந்த ஆட்சியா், கூடுதல் மருத்துவா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினாா். உள்நோயாளிகளிடம் நலம் விசாரித்தாா்.

அரசு அலுவலகத்தில் உள்ள பயோமெட்ரிக் அனைத்தும் முறையாக வேலை செய்யும் வகையில் சரி செய்ய வேண்டும் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

தொடா்ந்து புதுப்பட்டி சமத்துவபுரத்தில் வீடுகள் புதுப்பிக்கும் பணியை பாா்வையிட்டு, பணிகள் தரமாக இருக்க வேண்டும் என ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை, ஒன்றியக் குழுத் தலைவா் ரா. ரத்தினவேல் காா்த்திக், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சி. நளினி, த.திலகவதி மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT