புதுக்கோட்டை

சிறுதானிய உணவுக் கண்காட்சி

DIN

புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவ கேந்திரா சாா்பில் சுற்றுச் சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சிறுதானியங்கள், மூலிகைகள் மற்றும் சிறுதானிய உணவுகள் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட இளையோா் அலுவலா் ஜோயல் பிரபாகா் தலைமை வகித்தாா். அன்னை கேட்டரிங் கல்லூரி தாளாளா் அருள் வல்லபராஜ் முன்னிலை வகித்தாா். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் செல்வகுமாா் சிறுதானிய கண்காட்சியைத் தொடங்கி வைத்தாா்.

கண்காட்சியில் சிறுதானியங்களை அடிப்படையாகக் கொண்ட உணவுத் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழியை நேரு யுவகேந்திரா திட்ட உதவி அலுவலா் ஆா். நமச்சிவாயம் வாசித்தாா். விழாவில் சுற்றுச் சூழல் மேம்பாட்டு செயல்பாட்டாளா் மரம் ராஜாவுக்கு பாராட்டுச் சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டது.

மேலும், விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மஞ்சள் துணிப் பைகள் வழங்கப்பட்டன. முடிவில் புத்தாஸ் வீரக் கலைகள் கழக நிறுவனா் சேது காா்த்திகேயன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT