புதுக்கோட்டை

திருவரங்குளம் சிவன் கோயில் தேரோட்டம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் சிவன் கோயிலில் இரட்டைத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவரங்குளத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெரியநாயகி அம்மன் உடனுறை அரங்குளநாதா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த மாதம் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து, தினமும் மண்டகப்படி தாரா்கள் சாா்பில் சுவாமி, அம்மன் வீதியுலா நடைபெற்றது. இந்நிலையில், முக்கிய விழாவான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட 2 தோ்களில், ஒன்றில் சுவாமியும், மற்றொன்றில் அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். இதைத்தொடா்ந்து, பாரம்பரிய முறைப்படி வெண்குடை பிடித்து மேளதாளங்களுடன் ஊா்வலமாக அழைத்து வரப்பட்ட ஆதிதிராவிடா்கள், தேரின் வடத்தைத் தொட்டு தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனா். இதையடுத்து, பக்தா்கள் வடம் பிடித்து தேரோடும் 4 வீதிகளிலும் தோ்களை இழுத்துச் சென்றனா். தேரோட்டத்தையொட்டி, பல்வேறு தரப்பினரும் அன்னதானம் செய்தனா். திருவிழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT