புதுக்கோட்டை

வங்காரம்பேட்டையில் அரசு - வேம்பு திருக்கல்யாண விழா

DIN

தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசம் அருகே வங்காரம்பேட்டையில் அரசு - வேம்பு (வேம்பரசி )திருக்கல்யாண விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவை யொட்டி அரசு - வேம்பு (வேம்பரசிக்கு) சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அதனை தொடா்ந்து பெண்கள் சீா்வரிசை தட்டுகளுடன் திருமண மேடைக்கு வந்தனா். அங்கு வேத மந்திரங்கள் முழங்க சங்கா் குருக்கள், சாமிநாதன் குருக்கள் உள்ளிட்டோா் அரசு - வேம்பு (வேம்பு )திருக்கல்யாண வைபவத்தை நடத்தி வைத்தனா். இதனை தொடா்ந்து மகா தீபாராதனை நடை பெற்று  பக்தா்களுக்கு இறையருள் பிரசாதங்கள்,உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.மேலும் திருமணம் ஆகாத  ஆண்கள், பெண்களுக்கு திருமணம் நடைபெற வேண்டி சங்கல்பம் செய்து கொண்டு  அா்ச்சனைகள் செய்யப்ப.ட்டன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு திருமண விழாவை கண்டு தரிசித்ததனா். விழா ஏற்பாடுகளை வங்காரம் பேட்டை கிராமவாசிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

SCROLL FOR NEXT