ஆலங்குடி அருகே மது விற்பனையில் ஈடுபட்ட மூதாட்டியை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள பாப்பன்பட்டியில் சிலா் மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்வதாகக் கிடைத்த தகவலைத் தொடா்ந்து, ஆலங்குடி போலீஸாா் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட பாப்பன்பட்டியைச் சோ்ந்த மாரியம்மாள் (60) என்பவரைக் கைது செய்து, 135 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.