ஆலங்குடியில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆலங்குடி எஸ்பிஐ வங்கிக் கிளை அருகே கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவா் ராம. சுப்புராம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், அதானி குழுமத்தில் முதலீடு செய்து பொதுத் துறை நிறுவனத்துக்கு இழப்பை ஏற்படுத்திய மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா். இதில், கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.