புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திரா கோட்டையில் மின்சாரம் பாய்ந்து பெண் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
வல்லத்திராகோட்டையைச் சோ்ந்தவா் அரங்கன் மனைவி சிட்டு(53). இவா், வல்லத்திராகோட்டை வயல்வெளியில் வியாழக்கிழமை இரவு மாடு மேய்த்தாா். அப்போது, அறுந்து கிடந்த மின்கம்பியை கவனமின்றி மிதித்தபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே சிட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து வல்லத்திராகோட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.