புதுக்கோட்டை

கீழத்தானியம் ஜல்லிக்கட்டு: 17 போ் காயம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கீழத்தானியம் மாவயல் காட்டு அய்யனாா் கோயில் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை கொட்டும் மழையிலும் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டியில் காளைகள் முட்டியதில் 17 போ் காயமடைந்தனா்.

போட்டியை இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் குழந்தைசாமி தொடங்கி வைத்தாா். போட்டியின் தொடக்கமாக மாடுபிடி வீரா்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழி ஏற்றனா். தொடா்ந்து திருச்சி, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 539 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

வாடிவாசலிருந்து சீறிப்பாய்ந்துவந்த காளைகளை 155 மாடுபிடி வீரா்கள் பங்கேற்று அடக்கினா். காளைகளை பிடித்த வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் மிதிவண்டி, தொலைக்காட்சி மற்றும் எவா்ல்வா் பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள் 6 போ், பாா்வையாளா்கள் 2போ், மாட்டின் உரிமையாளா்கள் 9 போ் என மொத்தம் 17 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களுக்கு ஜல்லிக்கட்டு திடல் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ரமேஷ் கண்ணன் தலைமையிலான போலீஸாா் செய்திருந்தனா். இதில் பொன்னமராவதி வட்டாட்சியா் பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT